





2025 உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள " உங்களுக்கு தேவையற்றது.இன்னொருவருக்கு பயனளிக்கும்" செயற்றிட்டமானது எமது சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இச் செயற்றிட்டத்தில் எமது சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களிடமுள்ள "உங்களுக்கு தேவையற்றது" எனக்கருதப்படும் பொருட்களினை (ஆடைகள், விளையாட்டுப்பொருட்கள், காலணிகள், கைப்பைகள், இலத்திரணியல் பொருட்கள், வேறு பொருட்கள்) புத்தூர்-தலைமைஅலுவலகத்திலோ அல்லது உப அலுவலகங்களிலோ கையளிக்க முடியும்.
அதே போல் புத்தூர்- தலைமை அலுவலகத்தில் தரம்பிரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் பகிர்ந்தளிப்பு விசேட நிலையத்தில் உங்களுக்குத் தேவையான பொருட்களினை பெற்றுக்கொள்ளலாம்.
இச் செயற்றிட்டத்திற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பினை வேண்டி நிற்கின்றோம்.
தகவல்
செயலாளர்
வலி கிழக்கு பிரதேசசபை- புத்தூர்
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக வடிவமைக்கப்பட்டு யாழ்ப்பாணம் ஒட்டகப்புலம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வின் போது இந்த இணைய செயலி மக்கள் மயப்படுத்தப்பட்டது. இவ் இணைய செயலியை பயன்படுத்த www.farmtogate.org எனும் முகவரிக்குள் உள்நுழைந்து பயன்படுத்தலாம் .
வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட முதியோருக்கு படுக்கை வசதிகள் வழங்கப்பட்டது. அதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.