2025 உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள ” உங்களுக்கு தேவையற்றது.இன்னொருவருக்கு பயனளிக்கும்” செயற்றிட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட பொருட்கள் புத்தூர் – தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொருட்களினை பகிர்ந்தளிக்கும் விசேட நிலையத்தில் பொருட்கள் தரம்பிரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

  2025 உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள " உங்களுக்கு தேவையற்றது.இன்னொருவருக்கு பயனளிக்கும்" செயற்றிட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட பொருட்கள் புத்தூர் - தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொருட்களினை பகிர்ந்தளிக்கும் விசேட நிலையத்தில் பொருட்கள் தரம்பிரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையத்தின் மூலம் சேகரித்த பொருட்களினை பகிர்ந்தளிக்கும் ஆரம்ப நிகழ்வில் (05.06.2025) யாழ்ப்பாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.ப.பார்த்தீபன் அவர்களது பங்குபற்றுதலுடன் சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

2025- உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு புத்தூர் பிரதேசபையினரின் “உங்களுக்கு தேவையற்றது. இன்னொருவருக்கு பயனளிக்கும்” செயற்றிட்டத்தின் கீழ் அச்சுவேலிவடக்கு சனசமூகநிலையம். கதிரொளி அறிவகத்தினருடன் இணைந்து 05.06.2025ஆந் திகதி நிகழ்வு நடாத்தப்பட்டது.

2025- உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு புத்தூர் பிரதேசபையினரின் "உங்களுக்கு தேவையற்றது. இன்னொருவருக்கு பயனளிக்கும்" செயற்றிட்டத்தின் கீழ் அச்சுவேலிவடக்கு சனசமூகநிலையம். கதிரொளி அறிவகத்தினருடன் இணைந்து 05.06.2025ஆந் திகதி நிகழ்வு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.பார்த்தீபன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். அத்துடன் கோப்பாய் பிரதேச செயலக உதவித்திட்ட பணிப்பாளர், சபையின் செயலாளர், கிராம அலுவலர், Green Layer அமைப்பின் இயக்குநர், அச்சுவேலி உப அலுவலக பொறுப்பதிகாரி, உத்தியோகத்தர்கள் மற்றும் சனசமூகநிலைய பிரதிநிதிகள், முன்பள்ளி ஆசிரியர்கள், முன்பள்ளி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தனர். இம் மரம் நாட்டு நிகழ்விற்கான மரங்களினை Green Layer அமைப்பினர் வழங்கியிருந்தனர்

2025 உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள ” உங்களுக்கு தேவையற்றது. இன்னொருவருக்கு பயனளிக்கும்” செயற்றிட்டம்


🌎

2025 உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள " உங்களுக்கு தேவையற்றது.இன்னொருவருக்கு பயனளிக்கும்" செயற்றிட்டமானது எமது சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

♻ இச் செயற்றிட்டத்தில் எமது சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களிடமுள்ள "உங்களுக்கு தேவையற்றது" எனக்கருதப்படும் பொருட்களினை (ஆடைகள், விளையாட்டுப்பொருட்கள், காலணிகள், கைப்பைகள், இலத்திரணியல் பொருட்கள், வேறு பொருட்கள்) புத்தூர்-தலைமைஅலுவலகத்திலோ அல்லது உப அலுவலகங்களிலோ கையளிக்க முடியும்.

♻ அதே போல் புத்தூர்- தலைமை அலுவலகத்தில் தரம்பிரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் பகிர்ந்தளிப்பு விசேட நிலையத்தில் உங்களுக்குத் தேவையான பொருட்களினை பெற்றுக்கொள்ளலாம்.

👨‍👨‍👧‍👧 இச் செயற்றிட்டத்திற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பினை வேண்டி நிற்கின்றோம்.

தகவல்

செயலாளர்

வலி கிழக்கு பிரதேசசபை- புத்தூர் 

கோப்பாய் உப அலுவலக எல்லைக்குட்பட்ட “அம்மாச்சி” உணவகமானது கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

உரும்பிராய் உப அலுவலகத்திற்கு உட்பட்ட மக்களின் வசதி கருதி எதிர்வரும் 2024.05.11ஆம் திகதி சனிக்கிழமை, உரும்பிராய் கிழக்கு காந்திஜி சனசமூகநிலையத்தில், நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உரும்பிராய் உப அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் வசதி கருதி எதிர்வரும் 2024.05.11ஆம் திகதி சனிக்கிழமை, உரும்பிராய் கிழக்கு காந்திஜி சனசமூகநிலையத்தில், நடமாடும் சேவை நடைபெறவுள்ளது. குறித்த நடமாடும் சேவையில் பின்வரும் சேவைகள் நடைபெறவுள்ளன. • ஆதனவரி அறவீடு • ஆதனப் பெயர்மாற்றம், கட்டட விண்ணப்பங்கள் தொடர்பான சேவைகள் • வியாபார உரிமம், வரி அறவீடுகள், புதிய வியாபார நிலையங்களை பதிவுசெய்தல், • நடமாடும் நூலக சேவை (நூல்கள் இரவல் வழங்கல், புதிய அங்கத்தவர்களை இணைத்தல்) • ஆயுள்வேத வைத்திய சேவை – பொதுமக்கள் வைத்திய சேவையில் பங்குபற்றி இலவசமாக மருத்துவ ஆலோசனை, மற்றும் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம்.) • வீதி மின்விளக்குகள் திருத்துதல்;, முறைப்பாடுகள் • கழிவகற்றல் சேவை • துவிச்சக்கரவண்டி உரிமம் • வளர்ப்பு நாய்களை பதிவு செய்தல்.

கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் FARM TO GATE இணைய செயலி 22.03.2024 அன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக வடிவமைக்கப்பட்டு யாழ்ப்பாணம் ஒட்டகப்புலம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வின் போது இந்த இணைய செயலி மக்கள் மயப்படுத்தப்பட்டது. இவ் இணைய செயலியை பயன்படுத்த www.farmtogate.org எனும் முகவரிக்குள் உள்நுழைந்து பயன்படுத்தலாம் .

வடக்குமாகாண 34 உள்ளுராட்சி மன்றங்களுக்குமான இணையத்தளங்களினை வெளியிடும் நிகழ்வு 01.03.2024 ம் திகதி நடைபெற்றது.

வடக்குமாகாண 34 உள்ளுராட்சி மன்றங்களுக்குமான இணையத்தளங்களினை கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால் வைபவரீதியாக வெளியிடும் நிகழ்வானது 01.03.2024ஆந் திகதியன்று பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ ஆளுநர், வடமாகாண பிரதம செயலாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், UNDP-CDLG திட்ட முகாமையாளர், மாகாண இறைவரி ஆணையாளர், உள்ளுராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர்கள், சபையின் செயலாளர்கள், இணையத்தள வடிவமைப்பில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளுராட்சி திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.  

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 29.02.2023 ம் திகதி வெகு சிறப்பாக நடைபெற்றது

நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்கில் வலிகாமம் கிழக்கு பிரதேசசபையினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இருந்து  கற்றல் உபகரணங்கள் வழங்கப்படவுள்ள 370 பாடசாலை மாணவர்களில் முதற்கட்டமாக 52  பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கௌரவ ஆளுனரின் வருகையுடன் சென் தெரசா மகளிர் கல்லூரியில் 29.02.2024 ம் திகதி வெகு சிறப்பாக நடைபெற்றது      

கௌரவ ஆளுனருடனான பொது அமைப்புக்கள், பொது மக்கள் குறைகேள் நிகழ்வு 29.02.2024 வியாழக்கிழமை நடைபெற்றது.

அச்சுவேலி உப அலுவலக பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கௌரவ ஆளுனருடனான பொது அமைப்புக்கள் மற்றும் சனசமூக நிலையங்கள் உடனான பொது மக்கள் குறைகேள் நிகழ்வு 29.02.2024 வியாழக்கிழமை 4.30 மணிக்கு அச்சுவேலி செந்திரேச மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.  

வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட முதியோருக்கு படுக்கை வசதிகள் வழங்குதல்

வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட முதியோருக்கு படுக்கை வசதிகள் வழங்கப்பட்டது. அதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.