2025 உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள ” உங்களுக்கு தேவையற்றது. இன்னொருவருக்கு பயனளிக்கும்” செயற்றிட்டம்


🌎

2025 உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள " உங்களுக்கு தேவையற்றது.இன்னொருவருக்கு பயனளிக்கும்" செயற்றிட்டமானது எமது சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

♻ இச் செயற்றிட்டத்தில் எமது சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களிடமுள்ள "உங்களுக்கு தேவையற்றது" எனக்கருதப்படும் பொருட்களினை (ஆடைகள், விளையாட்டுப்பொருட்கள், காலணிகள், கைப்பைகள், இலத்திரணியல் பொருட்கள், வேறு பொருட்கள்) புத்தூர்-தலைமைஅலுவலகத்திலோ அல்லது உப அலுவலகங்களிலோ கையளிக்க முடியும்.

♻ அதே போல் புத்தூர்- தலைமை அலுவலகத்தில் தரம்பிரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் பகிர்ந்தளிப்பு விசேட நிலையத்தில் உங்களுக்குத் தேவையான பொருட்களினை பெற்றுக்கொள்ளலாம்.

👨‍👨‍👧‍👧 இச் செயற்றிட்டத்திற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பினை வேண்டி நிற்கின்றோம்.

தகவல்

செயலாளர்

வலி கிழக்கு பிரதேசசபை- புத்தூர்