2025 உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள ” உங்களுக்கு தேவையற்றது.இன்னொருவருக்கு பயனளிக்கும்” செயற்றிட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட பொருட்கள் புத்தூர் – தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொருட்களினை பகிர்ந்தளிக்கும் விசேட நிலையத்தில் பொருட்கள் தரம்பிரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

  2025 உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள " உங்களுக்கு தேவையற்றது.இன்னொருவருக்கு பயனளிக்கும்" செயற்றிட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட பொருட்கள் புத்தூர் - தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொருட்களினை பகிர்ந்தளிக்கும் விசேட நிலையத்தில் பொருட்கள் தரம்பிரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையத்தின் மூலம் சேகரித்த பொருட்களினை பகிர்ந்தளிக்கும் ஆரம்ப நிகழ்வில் (05.06.2025) யாழ்ப்பாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.ப.பார்த்தீபன் அவர்களது பங்குபற்றுதலுடன் சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

2025- உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு புத்தூர் பிரதேசபையினரின் “உங்களுக்கு தேவையற்றது. இன்னொருவருக்கு பயனளிக்கும்” செயற்றிட்டத்தின் கீழ் அச்சுவேலிவடக்கு சனசமூகநிலையம். கதிரொளி அறிவகத்தினருடன் இணைந்து 05.06.2025ஆந் திகதி நிகழ்வு நடாத்தப்பட்டது.

2025- உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு புத்தூர் பிரதேசபையினரின் "உங்களுக்கு தேவையற்றது. இன்னொருவருக்கு பயனளிக்கும்" செயற்றிட்டத்தின் கீழ் அச்சுவேலிவடக்கு சனசமூகநிலையம். கதிரொளி அறிவகத்தினருடன் இணைந்து 05.06.2025ஆந் திகதி நிகழ்வு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.பார்த்தீபன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். அத்துடன் கோப்பாய் பிரதேச செயலக உதவித்திட்ட பணிப்பாளர், சபையின் செயலாளர், கிராம அலுவலர், Green Layer அமைப்பின் இயக்குநர், அச்சுவேலி உப அலுவலக பொறுப்பதிகாரி, உத்தியோகத்தர்கள் மற்றும் சனசமூகநிலைய பிரதிநிதிகள், முன்பள்ளி ஆசிரியர்கள், முன்பள்ளி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தனர். இம் மரம் நாட்டு நிகழ்விற்கான மரங்களினை Green Layer அமைப்பினர் வழங்கியிருந்தனர்

2025 உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள ” உங்களுக்கு தேவையற்றது. இன்னொருவருக்கு பயனளிக்கும்” செயற்றிட்டம்


🌎

2025 உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள " உங்களுக்கு தேவையற்றது.இன்னொருவருக்கு பயனளிக்கும்" செயற்றிட்டமானது எமது சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

♻ இச் செயற்றிட்டத்தில் எமது சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களிடமுள்ள "உங்களுக்கு தேவையற்றது" எனக்கருதப்படும் பொருட்களினை (ஆடைகள், விளையாட்டுப்பொருட்கள், காலணிகள், கைப்பைகள், இலத்திரணியல் பொருட்கள், வேறு பொருட்கள்) புத்தூர்-தலைமைஅலுவலகத்திலோ அல்லது உப அலுவலகங்களிலோ கையளிக்க முடியும்.

♻ அதே போல் புத்தூர்- தலைமை அலுவலகத்தில் தரம்பிரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் பகிர்ந்தளிப்பு விசேட நிலையத்தில் உங்களுக்குத் தேவையான பொருட்களினை பெற்றுக்கொள்ளலாம்.

👨‍👨‍👧‍👧 இச் செயற்றிட்டத்திற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பினை வேண்டி நிற்கின்றோம்.

தகவல்

செயலாளர்

வலி கிழக்கு பிரதேசசபை- புத்தூர்