கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் FARM TO GATE இணைய செயலி 22.03.2024 அன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக வடிவமைக்கப்பட்டு யாழ்ப்பாணம் ஒட்டகப்புலம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வின் போது இந்த இணைய செயலி மக்கள் மயப்படுத்தப்பட்டது. இவ் இணைய செயலியை பயன்படுத்த www.farmtogate.org எனும் முகவரிக்குள் உள்நுழைந்து பயன்படுத்தலாம் .

வடக்குமாகாண 34 உள்ளுராட்சி மன்றங்களுக்குமான இணையத்தளங்களினை வெளியிடும் நிகழ்வு 01.03.2024 ம் திகதி நடைபெற்றது.

வடக்குமாகாண 34 உள்ளுராட்சி மன்றங்களுக்குமான இணையத்தளங்களினை கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால் வைபவரீதியாக வெளியிடும் நிகழ்வானது 01.03.2024ஆந் திகதியன்று பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ ஆளுநர், வடமாகாண பிரதம செயலாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், UNDP-CDLG திட்ட முகாமையாளர், மாகாண இறைவரி ஆணையாளர், உள்ளுராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர்கள், சபையின் செயலாளர்கள், இணையத்தள வடிவமைப்பில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளுராட்சி திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.